Tuesday, February 1, 2011

காதல் ....



நிழல் கூட வெளிச்சம் உள்ள வரை தான் துணைக்கு வரும் - ஆனால்
உண்மையான அன்பு .. உயிர் உள்ள வரை துணைக்கு வரும் .. உன்னை போல் ...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் தனிமையே
உன் பிரிவை
அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

காதல் திரைப்படமா
பார்த்து வாங்கி வா
என்றார்கள் வீட்டில்

நான் காதலையே
...வாங்கி வந்தேன்
விரட்டிவிட்டார்கள்
வீதியில்


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உன் காதல்
குழந்தையை
கலைக்க

வைத்தியர்
...தேவையில்லை

உன் குடும்ப
உறுப்பினர்
ஒருவர் போதும்...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ
கொலை செய்த
கைதி என்றால்கூட

உன் விடுதலை
...அன்றாவது
யாரையாவது
எதிர்பார்க்கலாம்

நீ
காதல் செய்தால்
எதிர்பாரமல் கூட
உன் சாவுக்கு
சொந்தம் வராது...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சேற்றில்
விழுந்தாலும்

காதலில்
விழுந்திடாதே
...
உன் வீட்டில்
எல்லோரும்

தலை முழுக
வேண்டிவரும்...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

திருமணம் மரணம் இந்த இரண்டிலும் மனம் தான் ஒன்று சேர்க்கிறது...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் காதல் இயற்க்கைக்கு புறம்பானது ஏன் தெரியுமா? மரணமே இல்லை என்பதால்.....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

காதலுக்கு இதயம் இருப்பது உண்மை தான் ஆனால் என் காதல் இதயத்துக்குள் அல்லவே இருக்கின்றது...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே.....

ஒருவேளை மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும் என் பாழாய்ப்போன மனது.........


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நேற்றைய என்னை இன்றைய நான் வெல்லத் துடிக்கிறேன்… நாளைய என்னிடம் இன்றைய நான் தோற்கப்போவது தெரிந்திருந்தும்......


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

மனதினுள் நீயும் உயிருக்குள் உன் நினைவும் உன் உணர்வுகளுடன் என் உணர்வும் இருக்கும் போது உன்னை மறப்பது சாத்தியமா? சாதனைதான்!!! சிரிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்திற்கு தவிக்கவும் கற்று கொடுத்து விட்டாயே......


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான்
என்னுள்
உனக்கான கவிதை
உறங்கிக் கொண்டிருக்கிறது...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ
என் காதலை
மறுத்ததுக்கு
பதிலாய்

என்னை
கொண்றிருந்தால்

என்
பிணத்தை

நானே
சுமக்க வேண்டி
வந்திருக்காது...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

யார் சொன்னது
திருடியவன் தான்
சிறையில் இருப்பான் என்று?

என் இதயத்தைத் திருடியவள்;
இன்று மாற்றான் மனைவி
நானோ தனிமைச் சிறையில்!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சந்தோசமாய் உன் விரல் பிடித்து சிறுகுழந்தை போல விளையாடிக்கொண்டே நடக்கிறது மனது அருகருகே நடந்துகொண்டிருக்கிறோம் நாம்......

if i leave will u miss me??

இல்லை என்றால் நம்பிவிடவும் ஆமாம் என்றால் ஒத்துக்கொள்ளவுமா போகிறாய்... ஆனால் தயவு செய்து பிரியும் போது ஞ்சம் வலிக்காமல் தான் பிரிந்து போயேன் பயமாய் இருக்கிறது...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

online'ல் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் பேசத்துடிக்கிறது மனது பேசாமல் விட்ட விசயங்களும் பேசுவதற்காய் சேர்த்து வைத்தவைகளும்.........


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் கண்ணுக்கும் மனதுக்கும் கருத்து வேறுபாடு ...உன்னை பார்க்க வேண்டுமென்று கண்களும்... தனக்கு வலிகளை அளிக்க வேண்டாமென மனதும்..........


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

எனக்கும் அவளுக்குமான சண்டைகளில் சாகடிக்க பட்டு... காரணம் நாமாய் இருக்க ...பழியை ஏற்று கொள்கிறது காதல்........


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

ஏன் காதலித்தாய்? எதற்காய் காதலித்தாய்? என்ற உன் வினாக்களுக்கு எனக்கு விடை தெரியாது. ஆனால் காதலித்தேன் இதுதான் உண்மை........


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் காதலுக்காக மரணத்தை விதையக்கினேன் அங்கேயும் உன் நினைவுதான் விருச்சமாய் முளைக்கிறது ............


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நொடிக்கு
நொடி
நினைக்கும்
அவளை
எப்படி
மறப்பது
என்று
தெரியாமல்தான்
உறங்கிவிட்டேன்
இந்த‌
"கல்லறையில்....................."


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சூரியன் பகலினை விட்டு சந்திரன் இரவினை விட்டு
உன் கண்களுக்குள் வந்து மறைந்து கொண்டதுவோ
இப்படி சுடுகின்றாய் சிலிர்க்கின்றாய் ...........


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கருகி இறக்கிறது அனுதினமும் என் தோட்டத்தில் ரசிக்கப்படாத ஒரு ரோஜா......

விளையாட ஆளின்றி அழுது அழுது தூங்கி விடுகிறது என் எதிர் வீட்டில் ஒரு குழந்தை.....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சொட்டு சொட்டாய்
விழுந்து விடுகின்றன
சாக்கடையில்
என் வீடு வந்த
மழை துளிகள்...

பாராட்டுக்கள் ஏதுமின்றி
புதைந்து விடுகின்றன
புத்தகத்தில்
என் தங்கை வரைந்த
ரங்கோலிகள்......

இவையேதும் அறியாமல்
வேலை, வேட்கை என்று
சுழண்டு கொண்டிருக்கும்
நான்
இறந்தும் போவேன்
ஒரு நாள்
இறந்து விட்டேன்
என்பது கூட தெரியாமல்!!!


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அன்று கல்லறை மீது வேதங்கள் ஓதப்பட்டன
இன்று வேதங்களே கல்லறை ஆகிவிட்டன
நீ இல்லாததால் ..........


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ தீண்டி விட்டுப்போன என் இதய காயம் ஆறாமல் வலிக்குதடி நீ விதைத்து விட்டுப் போன விதைகள் எனது நெஞ்சத்தில் இன்னும் முளையாய் முளைத்து நிற்ககுதடி சிலகாலத்தில் காயங்கள் ஆறிவிடலாம் ஆனால் காயத் தழும்பு ஆறிவிடாது. உன் நினைவுகள் என்றும் என் நெஞ்சை விட்டகலாதடி....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உன்மீது என் காதல், என்மீது உன் காதல் கடைசிவரை உச்சரிக்கப்படாமல் உரசாமல் உறங்கட்டும்...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


அன்பே உன் கன்னத்தில் முத்தமிட முடியாததால் நான் மரணத்தை முத்தமிடுகிறேன்...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

காதலித்துப்பார் விழிகள் சிந்தாத கண்ணீரைக்கூட

உன் இதயம் சிந்தும் இரத்தமாக........


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥








என் இதயத்தைத் திருடியவள்...




ஒரு நாள் எனக்கு மரணம் வரும்...........

அப்போது எனை பார்த்து அழுது விடாத பெண்ணே........!!

எழுந்தாலும் எழுந்து விடுவேன் உன் கண்ணீரை துடைக்க..........!!!