Tuesday, April 19, 2011

புனிதமானது...





உலகத்திலேயே மோசமானது உன்னால் யாராவது கண்ணீர் சிந்துவது!உலகத்திலேயே ரொம்ப புனிதமானது உனக்காக யாராவது கண்ணீர் சிந்துவது!!


~~~~~~~~~~


தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே!!


~~~~~~~~~~


உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விடயதிலிருன்தும்விலகியே இரு!!


~~~~~~~~~~


உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே! நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு!!


~~~~~~~~~~


தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!


~~~~~~~~~~


நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால் கூட பரவாயில்லை! யாரையும் புண்படுத்திவிடாதீர்கள்....!!


~~~~~~~~~~


தோல்விகளை நேசிக்கத் தெரிந்துகொள்!வெற்றியின் இரகசியம் உனக்கு புரியும் !!


~~~~~~~~~~


உலகில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல.நம்மை வெறுத்தவர்கள் நம்மை வாழ்த்தும் வரை...!!!


~~~~~~~~~~


வெற்றி என்பது உன்நிழல் போல,நீ அதை தேடி போகவேண்டியதில்லை,நீ வெளிச்சத்தை நோக்கிநடக்கும் போது தானேஉன்னுடன் வரும்...


~~~~~~~~~~


Thursday, April 7, 2011

ஏய் ஓவியப் பெண்ணே !!!!

மனதில் நிறைந்த உருவம் இங்கு உயிரில்லா ஓவியமாய்...என்னில் நிறைந்த காதல் உயிர் கொண்ட காவியமாய் ...... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஏய் ஓவியப் பெண்ணே !நீ என் கரம் பிடித்து காவியம் ஆவது எப்போதுபதில் தெரிந்தால் சொல்லடி உனக்கான என் தேடலை ...... நான் முடித்து கொள்கிறேன் ..... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~