Monday, October 17, 2011

பொன்மொழிகள்...




நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.

இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களேஎன்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள். "


" படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்இணைக்கத் தயாராக இருங்கள்.

எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பைஇழக்கத் தயாராகி விடாதீர்கள்!எனில், நீங்கள் எங்கிருந்து வந்தாலும்எங்கு வேண்டுமானாலும் போகலாம்”.


" இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”

- நபிகள் நாயகம்.


"காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”


"நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”


ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.


"எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்."


"பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட,

முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்."


நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.


முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..


ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போவதில்லை.


யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.


மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.


பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜமான தைரியம்.