
அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்
புத்தம் சரணம் கச்சாமி
யாழ்ப்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்ஷே
புத்தம் ரத்தம் கச்சாமி..!
கருணை
-------------
எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!
போதனை
---------------
நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!
அதிகப்பிரசங்கம்
-------------------------
இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!
முரண் முக்தி
--------------------
இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.
அவதார புருஷன்
-------------------------
கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!
நவயுக வேதாந்த விவாதம்
---------------------------------------
அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.
மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.
நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரத்தில் சூப் வைத்தேன்.
கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.
ஐங்கரன்
-------------
பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.
அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.
என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?
காமன் மேன்
------------------
திரைப்படத்தை பார்த்து
இசம் பற்றி பேசுபவர்கள்...
தங்கள் வீட்டில் ரசம் கூட
வைத்தது இல்லை..!
புல்லின் நுனியில் இருந்த பனித்துளியால்
புல் வளைந்து பூமியை தொடும்
தொலைவில் இருந்தது.
சூரியன் உதித்ததும் பனித்துளி மறைந்தது.
புல் நிமிர்ந்தது.
-------------------------------------------
தற்கொலை செய்யும் நோக்கில்
மரக்கிளையில் கயிற்றில் தொங்கினேன்.
என் பழுதாங்காமல் கிளை முறிய
விழுந்தேன் “பொத்” என...
கிளையில் இருந்த இலை மெதுவாக
காற்றில் அசைந்தவண்ணம் கீழே விழுந்தது.
------------------------------------------------
தினமும் செடிகளுக்கு நீர் ஊற்றினேன்
வளர்ந்தது.
தினமும் என் கால்களில் நீர் ஊற்றினேன்
நான் வளரவில்லை.
--------------------------------------------------
எங்கள் ஊரின் கிழக்கே பெரிய மலை உண்டு.
இருந்தும் சூரிய கிரணங்களை மறைக்க முடியவில்லை.
சூரியன் தினமும் உதிக்கவே செய்கிறது
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்
புத்தம் சரணம் கச்சாமி
யாழ்ப்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்ஷே
புத்தம் ரத்தம் கச்சாமி..!
கருணை
-------------
எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!
போதனை
---------------
நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!
அதிகப்பிரசங்கம்
-------------------------
இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
..............................
முரண் முக்தி
--------------------
இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.
அவதார புருஷன்
-------------------------
கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!
நவயுக வேதாந்த விவாதம்
------------------------------
அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.
மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.
நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரத்தில் சூப் வைத்தேன்.
கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.
ஐங்கரன்
-------------
பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.
அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.
என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?
காமன் மேன்
------------------
திரைப்படத்தை பார்த்து
இசம் பற்றி பேசுபவர்கள்...
தங்கள் வீட்டில் ரசம் கூட
வைத்தது இல்லை..!
புல்லின் நுனியில் இருந்த பனித்துளியால்
புல் வளைந்து பூமியை தொடும்
தொலைவில் இருந்தது.
சூரியன் உதித்ததும் பனித்துளி மறைந்தது.
புல் நிமிர்ந்தது.
------------------------------
தற்கொலை செய்யும் நோக்கில்
மரக்கிளையில் கயிற்றில் தொங்கினேன்.
என் பழுதாங்காமல் கிளை முறிய
விழுந்தேன் “பொத்” என...
கிளையில் இருந்த இலை மெதுவாக
காற்றில் அசைந்தவண்ணம் கீழே விழுந்தது.
------------------------------
தினமும் செடிகளுக்கு நீர் ஊற்றினேன்
வளர்ந்தது.
தினமும் என் கால்களில் நீர் ஊற்றினேன்
நான் வளரவில்லை.
------------------------------
எங்கள் ஊரின் கிழக்கே பெரிய மலை உண்டு.
இருந்தும் சூரிய கிரணங்களை மறைக்க முடியவில்லை.
சூரியன் தினமும் உதிக்கவே செய்கிறது