
Monday, October 17, 2011
பொன்மொழிகள்...

Wednesday, July 20, 2011

Wednesday, June 1, 2011
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை

எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.
"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.
ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.
போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.
உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"
என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.
"ஐயோ வடபோச்சே...."
காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்
ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி
என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.
ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த
உயரமான செடி? ''என்று கேட்டார்.
சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.
இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்
தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான
ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''
பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய
காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை
விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.
நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகுஇதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'
இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''.......
Tuesday, May 10, 2011
Tuesday, April 19, 2011
புனிதமானது...

உலகத்திலேயே மோசமானது உன்னால் யாராவது கண்ணீர் சிந்துவது!உலகத்திலேயே ரொம்ப புனிதமானது உனக்காக யாராவது கண்ணீர் சிந்துவது!!
~~~~~~~~~~
தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே!!
~~~~~~~~~~
உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விடயதிலிருன்தும்விலகியே இரு!!
~~~~~~~~~~
உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே! நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு!!
~~~~~~~~~~
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!
~~~~~~~~~~
நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால் கூட பரவாயில்லை! யாரையும் புண்படுத்திவிடாதீர்கள்....!!
~~~~~~~~~~
தோல்விகளை நேசிக்கத் தெரிந்துகொள்!வெற்றியின் இரகசியம் உனக்கு புரியும் !!
~~~~~~~~~~
உலகில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல.நம்மை வெறுத்தவர்கள் நம்மை வாழ்த்தும் வரை...!!!
~~~~~~~~~~
வெற்றி என்பது உன்நிழல் போல,நீ அதை தேடி போகவேண்டியதில்லை,நீ வெளிச்சத்தை நோக்கிநடக்கும் போது தானேஉன்னுடன் வரும்...
~~~~~~~~~~
Thursday, April 7, 2011
ஏய் ஓவியப் பெண்ணே !!!!


Monday, April 4, 2011
Thursday, March 31, 2011
Sunday, March 27, 2011
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை !!!

Friday, March 25, 2011
Thursday, March 17, 2011
காலப் பணம்
Wednesday, March 2, 2011
Tuesday, February 1, 2011
காதல் ....

நிழல் கூட வெளிச்சம் உள்ள வரை தான் துணைக்கு வரும் - ஆனால்
உண்மையான அன்பு .. உயிர் உள்ள வரை துணைக்கு வரும் .. உன்னை போல் ...
என் தனிமையே
உன் பிரிவை
அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது...
காதல் திரைப்படமா
பார்த்து வாங்கி வா
என்றார்கள் வீட்டில்
நான் காதலையே
...வாங்கி வந்தேன்
விரட்டிவிட்டார்கள்
வீதியில்
உன் காதல்
குழந்தையை
கலைக்க
வைத்தியர்
...தேவையில்லை
உன் குடும்ப
உறுப்பினர்
ஒருவர் போதும்...
நீ
கொலை செய்த
கைதி என்றால்கூட
உன் விடுதலை
...அன்றாவது
யாரையாவது
எதிர்பார்க்கலாம்
நீ
காதல் செய்தால்
எதிர்பாரமல் கூட
உன் சாவுக்கு
சொந்தம் வராது...
சேற்றில்
விழுந்தாலும்
காதலில்
விழுந்திடாதே
...
உன் வீட்டில்
எல்லோரும்
தலை முழுக
வேண்டிவரும்...
திருமணம் மரணம் இந்த இரண்டிலும் மனம் தான் ஒன்று சேர்க்கிறது...
என் காதல் இயற்க்கைக்கு புறம்பானது ஏன் தெரியுமா? மரணமே இல்லை என்பதால்.....
காதலுக்கு இதயம் இருப்பது உண்மை தான் ஆனால் என் காதல் இதயத்துக்குள் அல்லவே இருக்கின்றது...
மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே.....
ஒருவேளை மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும் என் பாழாய்ப்போன மனது.........
நேற்றைய என்னை இன்றைய நான் வெல்லத் துடிக்கிறேன்… நாளைய என்னிடம் இன்றைய நான் தோற்கப்போவது தெரிந்திருந்தும்......
மனதினுள் நீயும் உயிருக்குள் உன் நினைவும் உன் உணர்வுகளுடன் என் உணர்வும் இருக்கும் போது உன்னை மறப்பது சாத்தியமா? சாதனைதான்!!! சிரிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்திற்கு தவிக்கவும் கற்று கொடுத்து விட்டாயே......
எனக்குத் தெரியாத
வார்த்தைகளால்தான்
என்னுள்
உனக்கான கவிதை
உறங்கிக் கொண்டிருக்கிறது...
நீ
என் காதலை
மறுத்ததுக்கு
பதிலாய்
என்னை
கொண்றிருந்தால்
என்
பிணத்தை
நானே
சுமக்க வேண்டி
வந்திருக்காது...
திருடியவன் தான்
சிறையில் இருப்பான் என்று?
என் இதயத்தைத் திருடியவள்;
இன்று மாற்றான் மனைவி
நானோ தனிமைச் சிறையில்!!
சந்தோசமாய் உன் விரல் பிடித்து சிறுகுழந்தை போல விளையாடிக்கொண்டே நடக்கிறது மனது அருகருகே நடந்துகொண்டிருக்கிறோம் நாம்......
if i leave will u miss me??
இல்லை என்றால் நம்பிவிடவும் ஆமாம் என்றால் ஒத்துக்கொள்ளவுமா போகிறாய்... ஆனால் தயவு செய்து பிரியும் போது ஞ்சம் வலிக்காமல் தான் பிரிந்து போயேன் பயமாய் இருக்கிறது...
online'ல் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் பேசத்துடிக்கிறது மனது பேசாமல் விட்ட விசயங்களும் பேசுவதற்காய் சேர்த்து வைத்தவைகளும்.........
என் கண்ணுக்கும் மனதுக்கும் கருத்து வேறுபாடு ...உன்னை பார்க்க வேண்டுமென்று கண்களும்... தனக்கு வலிகளை அளிக்க வேண்டாமென மனதும்..........
எனக்கும் அவளுக்குமான சண்டைகளில் சாகடிக்க பட்டு... காரணம் நாமாய் இருக்க ...பழியை ஏற்று கொள்கிறது காதல்........
ஏன் காதலித்தாய்? எதற்காய் காதலித்தாய்? என்ற உன் வினாக்களுக்கு எனக்கு விடை தெரியாது. ஆனால் காதலித்தேன் இதுதான் உண்மை........
என் காதலுக்காக மரணத்தை விதையக்கினேன் அங்கேயும் உன் நினைவுதான் விருச்சமாய் முளைக்கிறது ............
நொடிக்கு
நொடி
நினைக்கும்
அவளை
எப்படி
மறப்பது
என்று
தெரியாமல்தான்
உறங்கிவிட்டேன்
இந்த
"கல்லறையில்....................."
சூரியன் பகலினை விட்டு சந்திரன் இரவினை விட்டு
உன் கண்களுக்குள் வந்து மறைந்து கொண்டதுவோ
இப்படி சுடுகின்றாய் சிலிர்க்கின்றாய் ...........
கருகி இறக்கிறது அனுதினமும் என் தோட்டத்தில் ரசிக்கப்படாத ஒரு ரோஜா......
விளையாட ஆளின்றி அழுது அழுது தூங்கி விடுகிறது என் எதிர் வீட்டில் ஒரு குழந்தை.....
சொட்டு சொட்டாய்
விழுந்து விடுகின்றன
சாக்கடையில்
என் வீடு வந்த
மழை துளிகள்...
பாராட்டுக்கள் ஏதுமின்றி
புதைந்து விடுகின்றன
புத்தகத்தில்
என் தங்கை வரைந்த
ரங்கோலிகள்......
இவையேதும் அறியாமல்
வேலை, வேட்கை என்று
சுழண்டு கொண்டிருக்கும்
நான்
இறந்தும் போவேன்
ஒரு நாள்
இறந்து விட்டேன்
என்பது கூட தெரியாமல்!!!
அன்று கல்லறை மீது வேதங்கள் ஓதப்பட்டன
இன்று வேதங்களே கல்லறை ஆகிவிட்டன
நீ இல்லாததால் ..........
நீ தீண்டி விட்டுப்போன என் இதய காயம் ஆறாமல் வலிக்குதடி நீ விதைத்து விட்டுப் போன விதைகள் எனது நெஞ்சத்தில் இன்னும் முளையாய் முளைத்து நிற்ககுதடி சிலகாலத்தில் காயங்கள் ஆறிவிடலாம் ஆனால் காயத் தழும்பு ஆறிவிடாது. உன் நினைவுகள் என்றும் என் நெஞ்சை விட்டகலாதடி....
உன்மீது என் காதல், என்மீது உன் காதல் கடைசிவரை உச்சரிக்கப்படாமல் உரசாமல் உறங்கட்டும்...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அன்பே உன் கன்னத்தில் முத்தமிட முடியாததால் நான் மரணத்தை முத்தமிடுகிறேன்...
காதலித்துப்பார் விழிகள் சிந்தாத கண்ணீரைக்கூட
உன் இதயம் சிந்தும் இரத்தமாக........
என் இதயத்தைத் திருடியவள்...
Sunday, January 30, 2011
இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
2) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
3) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?
4) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க..
நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு
மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர்
சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது
பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?
5) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது
தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று
படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர்
படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
Tuesday, January 25, 2011
ஐயோ பையன் இப்படிதான் இருக்கணும்..,
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!
------------------------------------------------
( இண்டெர்வியூ.. )
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க..
ஐயையோ.. அப்படின்னா " கோவா "
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!??
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
நடிகர் விஜய் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..
நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
( ஹோட்டலில் )
" ஒரு காபி எவ்ளோ..? "
" அஞ்சு ரூபா.. "
" எதிர் கடையில 50 பைசான்னு
போட்டு இருக்கே..?!! "
" டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "
* * * * * * * * * * * * * * * * * *
( கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "
" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"
* * * * * * * * * * * * * * * * * *
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
* * * * * * * * * * * * * *
மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ ...