
கண்ணாடி முன் ஒத்திகை பார்த்தேன்....!
என் வீட்டுக் கண்ணாடிபோதும் போதும் என்றுவாய் விட்டுக் கதறிடும் முன்...,
ஒரு வழியாய்....,ஆனாலும்அரைமனதாய்.....,
ஒத்திகை முடித்தேன்.....!
நடக்கையிலும்....படுக்கையிலும்....,
மீண்டும் மீண்டும்மனதுக்குள்வார்த்தைகளைப்படர விட்டு.....,
அதுவும் போதாதென.....,கனவிலும் தொடர்ந்தேன்....!
இதோ....இப்போது.....,நீ என் எதிரில்.....,எனக்கு அருகில் இருக்கிறாய்.....!
ஆனால்.......வா......ர்.....த்.......தை.....க......ள்.........,சேர்த்து வைத்திருந்தசுவடே இல்லாமல் வெறுமையாய்......!!தேடித் தேடிநானும் சோர்ந்தேன்...,
காணவே இல்லை.....!!செய்வது புரியாமல்....,சொல்லவும் தெரியாமல்..........,
உன் கண்களைப் பார்த்தேன்....!!அய்யய்யோ.....,இது என்ன அதிசயம்.......!?!
எனக்கு இன்பமான அதிர்ச்சியும்தான்....,இது எப்படி சாத்தியம்....?
உன் கண்கள்நான் உன்னோடுஒத்திகையில் பேசிப்பார்த்ததை அப்படியேவார்த்தை மாறாமல் சொல்கிறது.....?
சந்தேகமாய்என்னையே கிள்ளியும் பார்த்தேன்.....கனவு இல்லை.....உண்மைதான்.
சந்தோசத்தில் அணுவெல்லாம் ஆகாயமாய் விரிகிறது....!
உன் இமைகள் கொண்டேஎன் இதயம் தோண்ட....உன்னால் மட்டும் எப்படி முடிகிறது......?
உன் ஒவ்வொருஅசைவுகளிலும்உயிரையே உறிஞ்சும் வித்தையை...,
எங்கேதான் கற்றாயோ.....?
ஒத்திகை பார்த்து வரும்ஒவ்வொரு முறையும்....உன் எதிரில் ஊமையாகிறேன்....!
ஆனால் நீயோ....நம் கண்கள் சந்திக்கும்...ஒரு நொடிப் பொழுதில்ஒருமணிநேர உரையாடலின்விரிவுரையை.....பார்வையிலேயே பேசி விடுகிறாய்....!
No comments:
Post a Comment