Monday, June 14, 2010

ஹைக்கூ கவிதைகள்...

உள்ளேயே இருந்தால் சோம்பல்,
வெளியேறினால் உழைப்பு ,
தொழிலாளியின் வியர்வை........


வெள்ளை காகிதத்தில் ,
கருப்பு புள்ளி ,
புது வீட்டில் திருஷ்டி பொம்மை .....


உயிர் உண்டு , உறுப்புகள் இல்லை,
உறுப்புகள் உண்டு , உயிர் இல்லை ,
இலங்கை தமிழன் ....


தவணை முறையில் ,
புற்று நோய் வாங்கினேன் ,
கடன் தொல்லை ...


கிழியாமல் நெய்தான் ,
கிழிந்த ஆடையோடு ,
நெசவாளி .....



என் இதயத்திற்குள் ,
வானொலி பெட்டி ,
ஒலித்தது, அவள் பெயர் அலைவரிசையாய்............


அன்று ,மகனை அறிமுகபடுத்தியவள் ,
இன்று ,அறிமுகம் இல்லாதோரோடு,
முதியோர் இல்லம் ...

No comments:

Post a Comment