Saturday, June 19, 2010

யார் மிருகம் ? யார் கடவுள் ? என் கவிதை ..

நீ என்னை அவமான படுத்தினாலும் ,
உன் மேலும் நான் அன்பாய் இருப்பேன் ..
நீ என்னை மட்டம் தட்டினாலும் ,
உனக்கும் ,நான் மரியாதை கொடுப்பேன் ...

நீ என்னை கேலி செய்தாலும் ,
உன்னையும் நான் நேசிப்பேன் ..
நீ என்னை தரக்குறைவாக நினைத்தாலும் ,
உன்னையும் நான் ,யாரிடத்தும் உன்னை தரம்தாள்த்தமாட்டேன்..
நீ என்னை ஏமாற்ற நினைத்தாலும் ,
உனக்கும் நான் உண்மை உள்ளவனாக இருப்பேன் ..
நீ எனக்கு எதிராக சூழ்சிகள் செய்தாலும் ,
உனக்கும், நான் பாசகரம் நீட்டுவேன் ..
இவை அனைத்தையும் செய்வதால் ,வாழும் காலத்தில் நீ மிருகமாய் வாழ்ந்து கொண்டிருப்பாய்,
நான் உன்னையும் மன்னித்து கடவுளாய் வாழுந்து கொண்டிருப்பேன் ..

No comments:

Post a Comment