Saturday, June 19, 2010

இலங்கை தமிழன் -என் கவிதை



என் சோகம் , அதை மறைக்க முடியவில்லை ,
என் பிரிவு ,அதை தடுக்க முடியவில்லை ,
என் அழுகை , அதை அடக்க முடியவில்லை ,
என் வேதனை , அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை
என் சுதந்திரம், அதை சுவாசிக்க முடியவில்லை ,
என் இல்லம் ,அதில் வாழ முடியவில்லை ,
என் வயல் , அதில் அறுவடை செய்யமுடியவில்லை ,
என் மக்களின் பிணங்கள் , அது அழுகுவதை, எரிக்க முடியவில்லை,
என் முள் வேலி ,அதை உடைத்தெறிய முடியவில்லை ,
என் பசி , அதை ருசித்து உன்ன முடியவில்லை,
என் ஆடை , அவற்றின் கிழிசலை தைக்க முடியவில்லை,
என் அடிமைவிலங்கு , அதை விலக்கி கொள்ள முடியவில்லை,
என் வேண்டுகோள் , அதை கேட்பதற்கு உலகத்தில் காதுகள் இல்லை,
என் இன பெண்களின் கற்பு , அதற்க்கு உத்திரவாதம் இல்லை ,
இப்படிக்கு ,
இலங்கை தமிழன்

No comments:

Post a Comment