Saturday, June 19, 2010

காதல் கவிதை !!!



என் காதல் கவிதைக்கு,
"
கருவாக" அவளை தேர்வுசெய்தேன் ,
ஆனால் , அவளோ ,அதற்கு ,நன்றிகடனாக , அவளின், தாய்மைக்கு "கருவாக" என்னை தேர்வு செய்தாள்...

யார் மிருகம் ? யார் கடவுள் ? என் கவிதை ..

நீ என்னை அவமான படுத்தினாலும் ,
உன் மேலும் நான் அன்பாய் இருப்பேன் ..
நீ என்னை மட்டம் தட்டினாலும் ,
உனக்கும் ,நான் மரியாதை கொடுப்பேன் ...

நீ என்னை கேலி செய்தாலும் ,
உன்னையும் நான் நேசிப்பேன் ..
நீ என்னை தரக்குறைவாக நினைத்தாலும் ,
உன்னையும் நான் ,யாரிடத்தும் உன்னை தரம்தாள்த்தமாட்டேன்..
நீ என்னை ஏமாற்ற நினைத்தாலும் ,
உனக்கும் நான் உண்மை உள்ளவனாக இருப்பேன் ..
நீ எனக்கு எதிராக சூழ்சிகள் செய்தாலும் ,
உனக்கும், நான் பாசகரம் நீட்டுவேன் ..
இவை அனைத்தையும் செய்வதால் ,வாழும் காலத்தில் நீ மிருகமாய் வாழ்ந்து கொண்டிருப்பாய்,
நான் உன்னையும் மன்னித்து கடவுளாய் வாழுந்து கொண்டிருப்பேன் ..

இலங்கை தமிழன் -என் கவிதை



என் சோகம் , அதை மறைக்க முடியவில்லை ,
என் பிரிவு ,அதை தடுக்க முடியவில்லை ,
என் அழுகை , அதை அடக்க முடியவில்லை ,
என் வேதனை , அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை
என் சுதந்திரம், அதை சுவாசிக்க முடியவில்லை ,
என் இல்லம் ,அதில் வாழ முடியவில்லை ,
என் வயல் , அதில் அறுவடை செய்யமுடியவில்லை ,
என் மக்களின் பிணங்கள் , அது அழுகுவதை, எரிக்க முடியவில்லை,
என் முள் வேலி ,அதை உடைத்தெறிய முடியவில்லை ,
என் பசி , அதை ருசித்து உன்ன முடியவில்லை,
என் ஆடை , அவற்றின் கிழிசலை தைக்க முடியவில்லை,
என் அடிமைவிலங்கு , அதை விலக்கி கொள்ள முடியவில்லை,
என் வேண்டுகோள் , அதை கேட்பதற்கு உலகத்தில் காதுகள் இல்லை,
என் இன பெண்களின் கற்பு , அதற்க்கு உத்திரவாதம் இல்லை ,
இப்படிக்கு ,
இலங்கை தமிழன்

என் சிந்தனை துளிகள்...



நீ ஒருவனுக்கு தீங்கு செய்ய நினைத்தால் , இன்னொருவன் உனக்கு தீங்கு செய்ய காத்திருக்கிறான் ...
நீ ஒருவனுக்கு உதவ நினைத்தால் , இன்னொருவன் உனக்கு உதவ காத்திருக்கிறான் .....
இந்த உலகம் உன்னை ரசிக்கும் நீ அழும்போது ,
இந்த உலகம் உன்னை வெறுக்கும் நீ சிரிக்கும் போது ,
இந்த உலகம் உன்னை நேசிக்கும் நீ உதவும் போது...


Monday, June 14, 2010

வாழ்வில் வெற்றீ பெற - சிந்தனைத்துளிகள்



உன் கடந்த கால சிறு வெற்றி ஒன்று இருக்கும் ,
அதை முயற்சி செய்து பார் ...
கடின உழைப்பு மட்டும் வெற்றி தராது ,
நடிகனை விட , விவசாயின் உழைப்பு அதிகம் ,
ஆனால், யாருக்கு ஊதியம் அதிகம் என்று எண்ணிப்பார்..
மற்றவர்கள் சொல்லும் துறையை தேர்த்துஏடுபதை விட ,
நீ நேசிக்கும் துறை யை ,
தேர்வுசெய் ...
முயற்சி செய்தால் வானமும் உனக்கு கீழே ,
என்ற வாதம் ஒத்து வராது ,
நூறு கோடி மக்களும் ,முயற்சி செய்தால், அம்பானியாக ,மாறமுடியுமா ?,

உன் நண்பர்களை நாடு ,
எவனோ ஒருவன் உனக்கு உதவ காத்திருப்பான் ..
எல்லோர் திறமையும் ,
முடங்கி போக ,
பொருளாதாரமும் ,வறுமைதான் ,
அதை துடைத்து ஏறிய முயற்சி செய் ..

உன் முதல் தோல்வியில் மனம் நோகும் ,
இரண்டாம் தோல்வியில் மனம் உடையும் ,
மூன்றாம் தோல்வியில் மனம் கலங்கும் ,
நான்காம் தோல்வியில் மனம் சுக்குநூறாகும் ,
உன் வெற்றிக்கான தேர்தெடுத்த பாதையை தவறு என்று சுட்டி காட்டுகின்றன அந்த தோல்விகள் ..
தோல்விதான் வெற்றிக்கு முதல் படி ,
என்ற வாதம் தவறானது ,
ஏழை ,இன்று வரை முயற்சிதான் செய்கிறான் ,
ஆயிரத்தில் ஒருவன்தான் வெற்றியும் பெறுகிறான் ..
மறந்துவிடாதே ,இந்த உலகம் ,நீ எது செய்தாலும் , குறை சொல்லத்தான் ,
நிறை சொல்ல அல்ல ...
பிறரிடம் ஆலோசனைகளை கேளுங்கள் ,
அதிகமாக கேட்காதிர்கள் , அவர்களும் உங்களை குழப்பலாம் ..
எது உனக்கு தெரியாது என்று உன்னை பார்த்து ,
ஏளனம் செய்கிறானோ , அதையே நாம் தேர்வு செய்துதான் பார்போமே ?
நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை விட ,
நம்மை நாமே நேசிப்போம் ...
யென்னவென்டும் ஒவொருவரும் ,
எனக்கு கிடைக்காதது ,
என் மகனுகாவது கிடைக்கவேன்டும் என்ரு ................
ஒருவன் வாழ்கையில் வெற்றீ பெர குடும்ப சுழலும் ஒரு காரனம் ,
சன்டையிடம் பெற்ரோர் ,
குடிகார தகப்பன் ,
கடனில் வீடு ,
கடைசியாக, நல்ல மனம் , எல்லொரிடதும் அன்பு கொன்டால் போதும் ...

ஹைக்கூ கவிதைகள்...

உள்ளேயே இருந்தால் சோம்பல்,
வெளியேறினால் உழைப்பு ,
தொழிலாளியின் வியர்வை........


வெள்ளை காகிதத்தில் ,
கருப்பு புள்ளி ,
புது வீட்டில் திருஷ்டி பொம்மை .....


உயிர் உண்டு , உறுப்புகள் இல்லை,
உறுப்புகள் உண்டு , உயிர் இல்லை ,
இலங்கை தமிழன் ....


தவணை முறையில் ,
புற்று நோய் வாங்கினேன் ,
கடன் தொல்லை ...


கிழியாமல் நெய்தான் ,
கிழிந்த ஆடையோடு ,
நெசவாளி .....



என் இதயத்திற்குள் ,
வானொலி பெட்டி ,
ஒலித்தது, அவள் பெயர் அலைவரிசையாய்............


அன்று ,மகனை அறிமுகபடுத்தியவள் ,
இன்று ,அறிமுகம் இல்லாதோரோடு,
முதியோர் இல்லம் ...

Thursday, April 8, 2010

கடி ....


1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2)
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3)
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4)
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5)
நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6)
மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7)
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8)
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9)
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10)
நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
**
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
**
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
**
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....




12)
ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13)
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14)
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1.
சிரிப்பு
2.
அழகு
3.
நல்ல டைப்
4.
கொழந்த மனசு...
5.
இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15)
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16)
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17)
தத்துவம் 2010
"
லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"
கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


18)
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19)
எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next
மீட் பண்றேன்...